Saturday 26 February 2011








வட சென்னை மாவட்டம் பழைய வண்ணராப்பேட்டை கிளை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனை இணைத்து 24.02.2011 அன்று நடத்திய மொபைல் இரத்ததான முகாமில் மொத்தம் 62 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


Tuesday 22 February 2011

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். ‘கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம்

Monday 21 February 2011

அறப்போரில் வெற்றி பெற்ற எகிப்திய மக்கள்

30  ஆண்டுகளாக எகிப்தை ஆண்டு வந்த எகிப்தின் அதிபர் கொடுங்கோலர் என்று எகிப்திய மக்களால் தூற்றப்பட்ட முபாரக் (மேற்குலக நாடுகள், குறிப்பாக டோனி பி’ளயர்’, முபாரக்கை மாவீரர், துணிச்சலானவர், நன்மைகளின் சக்தி என்றது நான்கு நாட்களுக்கு முன் வர்ணித்தது  குறிப்பிடத்தக்கது), எகிப்திய மக்களின் மாபெரும் அமைதியான அறப்போராட்டத்தின் எதிரொலியாக பதிவியிலிருந்து தூக்கி எறியாத குறையாக விலகியுள்ளார்.
கடந்த 18 நாட்களாக எகிப்திய மக்கள் அறப்போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள், நேற்று(வியாழக்கிழமை) விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று அவர் மக்களுக்கு அளித்த அறிக்கையில் தான் விலக மாட்டேன் என்றும் செப்டம்பர் மாதம் வரை தான் அதிபராக இருக்கப்போவதாகவும் கூறினார். அதைதொடர்ந்து மக்கள், இதுவரை இல்லாமல், முதல் முறையாக அதிபர் மாளிகையை முற்றுகை இட்டனர். வெள்ளிக்கிழமையன்று  எகிப்திய நேரப்படி மாலையில் அவர் விலகுவதாகவும், ராணுவத்தின் அதிகாரத்தில் எகிப்து ஒப்படைக்கப் படுவதாகவும் அவரது துணை அதிபர் ஓமர் சுலைமான் திடீரென (அமெரிக்க அதிபர் கூட இதை தொலைக்காட்சியில் பார்த்துத்தான் அறிந்ததாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ளது) அறிவித்துள்ளார்.
http://english.aljazeera.net/video/middleeast/2011/02/2011211165022206735.html
மக்கள் இதை இனிப்பு வழங்கி மகி்ழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
http://www.youtube.com/watch?v=yhh6Bd_SX8M
இந்த போராட்டம் சூடு பிடிக்க காரணகர்த்தாவாக வர்ணிக்கப்படுபவர் கூகுள் நிறுவன அரபுலக அதிகாரி வாயில் கனிம். இவர் மக்களை இன்டர்நெட் மூலம் புரட்சியை உருவக்கியர். இதனால் இவரை கொடுங்கோல் முபாரக் அரசு கடத்திக்கொண்டு பொய் துன்புருத்தியுள்ளது.
12 நாட்கள் இவரை கண்ணைக்கட்டியே வைத்து அடைக்கப்பட்டுள்ளார்.  12 நாட்களுக்குப்பின் அவரை விடுவித்துள்ளது.
அதன் பிறகு அவர் எகிப்திய தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டி மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டு பண்ணி பெரும் கூட்டத்தைக்கூட்டியுள்ளது. வாயில் கனிம் சி என் என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
http://www.youtube.com/watch?v=gvgl4qjrk5E
இவர் முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்குப்பின் அவர் அனுப்பிய வேண்டுகோளில் ஒன்று “Dear Western Governments, You’ve been silent for 30 years supporting the regime that was oppressing us. Please don’t get involved now ”
“மேற்குலக அரசுகளே, கடந்த 30 ஆண்டுகளாக இந்த கொடுங்கோல் அரசு எங்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டதை அமைதியாக வேடிக்கை பார்த்தீர்கள், தயவு செய்து தற்போது தலையிட வேண்டாம்”.
மேலும் படங்களுக்கு: http://totallycoolpix.com/2011/02/the-egypt-protests-mubarak-resignation-celebrations/
எல்லாம் வல்ல அல்லாஹ் எகிப்து மக்களுக்கு சிறந்த அரசை தருவானாக!.
சிறப்புச் செய்தி – அல்ம

"மாபெரும் ரத்ததான முகாம்"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பழைய வண்ணராப்பேட்டை கிளை மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் "மாபெரும் ரத்ததான முகாம்".

இடம் : மின்ட் பஸ் ஸ்டாண்ட் அருகில்
நாள் : "இன்ஷா அல்லாஹ்" எதிர் வரும் 24.02.2011 அன்று காலை 9 மணிக்கு....

அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்
பழைய வண்ணராப்பேட்டை கிளை.

ம.ம.கட்சியினர் மானம் காத்த லட்சணம்

ம.ம.கட்சியினர் மானம் காத்த லட்சணம்:
தற்போது சமுதாயத்தின் மானத்தை நாங்கள் காக்கப் போகிறோம் என்று கிளம்பியுள்ள ம.ம.கட்சியினர் தி.மு.க கூட்டணியிலிருந்த போது எந்த அளவிற்கு மானம் காத்தார்கள் என்பதனை தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் உணர்வு வாசகன் என்ற முறையில் ம.ம.கட்சியினர் மானம் காத்த (?) சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்கின்றேன்.
தங்களது மானத்தையே இவர்கள் காக்க வக்கில்லை; இவர்கள் சமுதாய மானம் காப்பது என்பது எப்படி?:
இவர்கள் சமுதாயத்தின் மானத்தை காப்பது இருக்கட்டும், தி.மு.க கூட்டணியிருந்த போது தங்களது மானத்தையாவது காத்துக் கொண்டிருந்தார்களா? என்று நாம் ஆய்வு செய்தால் இவர்களது மானமே கப்பலில் அல்ல; ஏரோப்பிளேனில் ஏறி பறந்து கொண்டிருந்தது என்று தான் நாம் சொல்ல வேண்டும்.
காரணமென்னவென்றால், இவர்கள் அந்தக் கூட்டணியில் இருந்த போது எந்த அளவிற்கு தங்களது மானத்தை இழந்து நின்றார்கள் என்று நாம் அறிந்து கொண்டால், தக்களது மானத்தையே காக்க துப்பில்லாதவர்கள் எப்படி சமுதாயத்தின் மானத்தை காப்பார்கள் என்பதை சிந்தனை திறன் கொண்ட ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.
சிறுநீர்கழிக்க சென்ற கலைஞருக்கு எழுந்து எழுந்து நின்று வணக்கம் செலுத்தி மானம் காத்தது:
திண்டுக்கல்லில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டின் போது மேடையில் அமர்ந்திருந்த கலைஞர் நீரழிவு நோயால் அவதிப்பட்டார். எனவே அடிக்கடி சிறுநீர்கழிக்க அவர் எழுந்து சென்ற போதெல்லாம், மானம் காக்க புறப்பட்ட ம.ம.க வின் ஒருங்கிணைப்பாளர் கலைஞர் சிறுநீர் கழிக்க சென்ற போதெல்லாம் எழுந்து எழுந்து அமர்ந்து கூழைக் கும்பிடு போட்டு மானம் காத்த லட்சணத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து மானம் காத்தது:
அத்தோடு மட்டுமில்லாமல், சென்ற பாராளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு சீட்டு இல்லை என்று திமுக தரப்பு இவர்களை விரட்டியடித்தது. திமுக தரப்பு இவர்களை விரட்டியது பற்றி இவர்களது அதிகாரப்பூர்வ ஏட்டில் ஒரு சகோதரர் கேள்வியெழுப்பினார். அவர் எழுப்பிய கேள்வியையும் அதற்கு அவர்கள் அளித்த பதிலையும் அப்படியே கீழே தருகின்றோம்.
அதை ஒரு முறை படித்து நன்கு சிந்தித்துப் பார்த்தீர்களேயானால் இவர்கள் திமுக வோடு இருந்த போது மானம் காத்தார்களா? அல்லது மானம் கெட்டு பதவி சுகத்திற்காக கேடுகெட்டு இருந்தார்களா? என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
கேள்வி: பல்லாவரத்தில் நடந்த ம.ம.க. கூட்டத்தில் கலைஞரையும், திமுகவையும் தாக்கிப் பேசியதால் தாங்கள் கூட்டணியிலிருந்து கழற்றி விடப்பட்டதாக திமுகவினர் கூறுகிறார்களே…?
பதில்: முற்றிலும் தவறான செய்தி. நமது தலைமை நிர்வாகிகள் பேசும் பொதுக்கூட்டங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. அதை யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக் காண்பிக்கிறோம். அப்படி பேசியதாக கூறுபவர்கள் அதனை நிரூபிக்கட்டும். இது போன்ற பொய்யான செய்திகளைக் கூறி, நம்மை வெளியே அனுப்பியதற்கு திமுக தரப்பு காரணங்களை கற்பிக்க முயல்கிறது. அவ்வளவு தான்.\
ம.ம.க வினரிடத்தில் கேட்கப்பட்ட கேள்வியையும் அதற்கு அவர்கள் அளித்த மானம் கெட்ட பதிலையும் ஒன்றுக்கு பல முறை படித்துப் பாருங்கள். இவர்கள் திமுக வீசி எறிந்த எலும்புத் துண்டுகளை வாங்கிக் கொண்டு இத்தனை வருடங்கள் நாங்கள் வாலாட்டிக் கொண்டல்லவா? இருந்து வந்தோம். ஒரு போதும் நாங்கள் அவர்களை விமர்சித்ததில்லையே; தாக்கிப் பேசியதில்லையே. அப்படி தாக்கிப் பேசியனால் அதை நிரூபிக்கத் தயாரா? நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுகின்றார்கள் என்றால் இவர்கள் தங்களது சுயநலனுக்காக சமுதாயத்தின் மானத்தை மட்டுமல்ல; தங்களது மானத்தையும் அடகு வைக்க துணிய மாட்டார்கள் என்று தெளிவாகின்றது.
மேலும் கூட்டணியில் இருந்து மானம் காப்பதற்காக நாங்கள் வெளியேறவில்லை. மாறாக திமுக தான் எங்களை வெளியேற்றியது; கழுத்தைப் பிடித்து தள்ளியது என்பதையும் மேலே கண்ட பதில் மூலம் ஒப்புக் கொண்டனர்.
இடஒதுக்கீடு துரோகத்தை ஆதரித்து மானம் காத்தது:
நாங்கள் தான் ரோஸ்டர் – பூஸ்டர் என்று இடஒதுக்கீட்டில் துரோகம் நடந்த போது கூட திமுக வை விமர்சிக்காமல் மானமிழந்தவர்களாச்சே! அந்த துரோகத்தை கலைஞரே ஒப்புக் கொண்டு; அதிகாரிகள் துரோகமிழைத்து விட்டனர் அந்த துரோகத்தை நான் சரிசெய்கிறேன் என்று ஒப்புக் கொண்ட போது கூட, அதாவது கலைஞரே தவறை ஒப்புக் கொண்ட போதும், இல்லை இல்லை கலைஞர் தவறு செய்யவில்லை என்று அவருக்கு முட்டுக் கொடுத்துள்ளார்கள் என்றால் மானம் காத்த மகிமையை எடை போட்டுக் கொள்ளுங்கள். அப்போதே விமர்சிக்காதவர்கள் இப்போதா விமர்சிக்க போகிறோம் என்று சவால் விடுகின்ற அளவுக்கு மானம் கெட்டு இருந்துள்ளார்கள் என்றால் இவர்களது மானம் காக்கும் லட்சணத்தை நாமே எடை போட்டு பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
102 தொகுதிகளில் தங்களது பலத்தைக் காட்டி மானம் காப்பார்களா?
சென்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக இவர்களை தங்களது கூட்டணியிலிருந்து கழற்றி விட்டவுடன் இவர்கள் கூறிய வாசகங்கள் இதோ!
ம.ம.க.வுக்கு துரோகம் செய்ததற்கான பலனை குறைந்தது 17 தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கூட்டணி சந்திக்கப் போகிறது என்பதை மே 13 தேர்தல் விரைவில் உணர்த்தும். கலைஞரை அந்த முடிவு திருத்தும்!
அதாவது இவர்களது ஆதரவு இல்லாவிட்டால் 17பாராளுமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி தோற்குமாம். அப்படி திமுக கூட்டணியை 17 பாராளுமன்ற தொகுதிகளில் தோற்கடித்து சமுதாய மானம் காப்பார்களாம்,
இப்போது நமது சட்டமன்ற தொகுதி கணக்கிற்கு வருவோம்.
ஒரு பாராளுமன்ற தொகுதி = ஆறு சட்டமன்ற தொகுதிகள்.
அதாவது ஆறு சட்டமன்ற தொகுதிகள் இணைந்தது தான் ஒரு பாராளுமன்ற தொகுதி.
அப்படியானால், இவர்கள் தி.மு.க விடம் சவால் விட்ட பிரகாரம் இவர்களது அசுர பலத்தை 17பாராளுமன்ற தொகுதிகளில் நிரூபிக்கலாம்.
அப்படியானால்,
17பாராளுமன்ற தொகுதி X ஆறு சட்டமன்ற தொகுதிகள் = 102 சட்டமன்ற தொகுதிகள்.
ஆக 102 சட்டமன்ற தொகுதிகளில் இவர்கள் போட்டியிடுவார்களேயானால் இவர்களே அவை அனைத்திலும் வெற்றிபெற்று தமிழக முதல்வர் அரியணையில் ஏறி அமர்ந்துவிடலாம். அதைவிட்டு விட்டு அதிமுக விடம் போய் 18 தொகுதிகளுக்காக இவர்கள் கெஞ்சிக் கொண்டு இருப்பது நமது சமுதாயத்திற்குப் பெரும் இழுக்கு. எனவே இவர்கள் தனித்து 102 தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து நமது சமுதாயத்தின் மானத்தைக் காக்க வேண்டும். காப்பார்களா?
குறிப்பு:
இந்தக் கட்டுரையை வாசிக்கக்கூடிய சகோதர சகோதரிகள் தயவுசெய்து சிரிக்க வேண்டாம்.
உணர்வு வாசகர் மன்றம்

முஸ்லிமைக் காஃபிராக்கிய கொள்(ளை)கை கூட்டம்

மதுரையில் விபச்சாரத்தைத் தடுக்கப் போவதாகக் கூறிக் கொண்டு ஒரு பெண்ணை ஆட்டோவில் கடத்தி கையும் களவுமாக என்று சொல்வார்களே அதைப் போல பெண்ணும், ஆட்டோவுமாகப் பிடிபட்ட எஸ்.டி.பி..ஐ நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களைப் போலீஸ் சிறையில் தள்ளியது. இவர்களது கொள்கைப் பிடிப்பைப் பற்றி உணர்வு வார இதழ் ஆதாரப்பூர்வமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியது.
இந்தக் கேடு கெட்டவர்களை நல்லவர்கள் என்று நம்பிய நடுநிலையாளர்களும் இவர்களைக் காரித்துப்ப இந்த விஷயத்தில் கதிகலங்கிப் போன கொள்கை(?) குன்றுகள் வேறுவழியின்றி பல பொய்களையும் கட்டுக் கதைகளையும் அவிழ்த்து விடத் தொடங்கியுள்ளனர். அவர்களது பொய் மூட்டைகளை ஒவ்வொன்றாக இப்போது அம்பலப்படுத்துவோம்.
புளுகு மூட்டை 1:
முஸ்லிமைக் காஃபிராக்கிய கதை:
”கடந்த 12.1.11 வியாழன் அன்று மதுரை மஹபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கடத்தியதாக மதுரை மாவட்ட எஸ்.டி.பி.ஐயின் 29 வது வார்டு கிளைப் பொருளாளர் அல்லாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ துணைச் செயலாளர் பரக்கத், அந்தப் பகுதியின் எஸ்.டி.பி.ஐ செயல் வீரர் பாபு ஆகியோர் உட்பட நான்கு பேரை எஸ்.எஸ்.காலணி காவல்துறை கைது செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”
மேற்கண்டவை தான் இவர்களை அம்பலப்படுத்தியது குறித்த உணர்வு இதழில் வெளியான வாசகங்கள். இதில் அந்தப்பகுதி எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர் பாபு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நாம் வைத்த குற்றச்சாட்டிற்கு இந்த மூளை வரண்ட கூட்டம் தரும் பதில் என்ன தெரியுமா?
”கைது செய்யப்பட்டவர்களில் பாபு என்ற மாற்று மதத்தைச் சேர்ந்தவரும் உண்டு, அதை அவர்களே வெளியிட்டுள்ளார்கள், அப்படி இருக்க பாபு எப்போது இஸ்லாமியப் போராளியானான்? என்பதும் நமக்குத் தெரியவில்லை”.
எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர் பாபு என்பவர் பெண் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று பகிரங்கமாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளோம். அதற்கு இந்தக் கூட்டம் அளிக்கும் பதில் அவன் எப்போது இஸ்லாமியப் போராளியானான்?. அவன் தான் காஃபிராச்சே! என்பது தான். இவர்கள் தாங்கள் நல்லவர்கள் தான் என்ற பொய்யை நிலைநாட்ட எத்தகைய பொய்யையும் சொல்லத் துணிவார்கள் என்பதை இவர்களது இந்த அண்டப் புளுகின் மூலமாக அறிய முடிகின்றது.
கடத்தலில் ஈடுபட்ட மூவரில் ஒருவரான பாபு என்பவர் முஸ்லிமாக இல்லாவிட்டாலும், எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர் என்று இருந்தாலே நம்முடைய குற்றச்சாட்டு உண்மையாகி விடுகின்றது. காரணம் என்னவென்றால் இவர்களது அமைப்பில் தான் காஃபிர்களும் பொறுப்பாளர்களாக இருக்கலாமே! அப்படியிருக்கையில், இவர் எங்களுடைய இயக்கத்தின் செயல் வீரர் இல்லை என்பதை மறுக்காமல் பாபு என்பவர் முஸ்லிமே இல்லை என்று மறுக்கின்றது இந்த கூறு கெட்ட கூட்டம்.
மதுரைப் பகுதியில் பாபு என்ற பெயரை முஸ்லிம்களும் வைப்பார்கள் என்பது பொது மக்களுக்குத் தெரியாது என்று தப்புக்கணக்குப் போட்டு பாபுவைக் காபிராக்கி விட்டனர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரையே காபிராக்கும் கொடிய கூட்டம் இது என்பது இப்போது தெரிய வந்த உண்மையாகும். பாபு என்பவர் இவர்கள் சொல்வது போல காஃபிர் இல்லை. மாறாக, அந்தப் பகுதி எஸ்.டி.பி.ஐ யின் இஸ்லாமிய (?) செயல் வீரர். அவரது தந்தை பெயர் ரஹீம். தாயார் பெயர் ஜஹபர் நிஷா. ரஹீமுக்கும் ஜஹபர் நிஷாவுக்கும் பிறந்து பின்னர் மதம் மாறிவிட்டார் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
இவர்கள் தாங்கள் நல்லவர்கள் என்பதை நிலைநாட்ட முஸ்லிமாக இருந்து கொண்டு இவர்களது அமைப்புக்காக உழைத்தவரை காஃபிராக்கி இஸ்லாத்தைவிட்டு வெளியேற்றியுள்ளனர்.
புளுகு மூட்டை 2:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் – எஸ்.டி.பி.ஐ. க்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்!
இப்படி ஓர் அரசியல் பேரியக்கம் தேவை என்பதை உணர்ந்து, அதை உருவாக்க முயற்சி எடுத்தது, உதவி செய்தது என்பதை தவிர எஸ்.டி.பி.ஐ.யின் நிர்வாகத்திற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் வேறு எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த மதத்தையும், இயக்கத்தையும், கொள்கைகளையும் சார்ந்தவர்கள் எஸ்.டி.பி.ஐ.யில் உறுப்பினராக இணைய முடியும்; நிர்வாகிகளாகவும் வர முடியும்.
மேற்கண்டவை தான் இவர்கள் விடும் பயங்கரமான அண்டப்புளுகு நம்பர் 2.
இந்த புளுகுதலை தற்போது ஏன் அவிழ்த்து விடுகிறார்கள் என்றால், இவர்கள் செய்த ஊழல் பட்டியல்களை நாம் பட்டியல் போட்டோம்.
ஊழல்களின் பட்டியல்:
1.ஏழைகளுக்கு நாங்கள் தோல் பணத்தை வசூலிக்கின்றோம் என்ற பெயரில் வசூல் செய்து வாரிச் சுருட்டியது,
2.பித்ராவை வசூலிக்கிறோம் என்ற பெயரில் ஏப்பம் விட்டது,
3.மொத்தமே 20பேர் படிக்கும் மதரஸாவிற்கு வசூல் செய்கின்றோம் என்ற பெயரில் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வாயில் போட்டுக் கொண்டது,
4.பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிதியுதவி என்ற பெயரில் பல லட்சங்களை வசூலித்து வாரிச் சுருட்டியது,
இது போன்ற இவர்களுடைய அத்தனை அத்தனை அஜண்டாக்களிலும் தாங்கள் கேடுகெட்டவர்கள் என்ற தனி முத்திரை பதிக்க இவர்கள் தவறியதில்லை என்று நாம் வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாமலும், வேறு வழியின்றியும், அப்படி பதில் சொல்லாமல் இருந்தால் அடுத்து வாரிச் சுருட்ட முடியாது என்ற பயத்திலும், இவர்கள் தற்போது அவிழ்த்து விடும் ஆகாசப்புளுகு மூட்டை தான் பாப்புலர் பிரண்ட் என்ற இயக்கத்துக்கும் எங்களுக்கும் தற்போது எந்த சம்பந்தமுமில்லை என்பதாகும்.
கேழ்வரகில் நெய் வடிகின்றது என்று சொன்னால் சமுதாய மக்கள் நம்பி விடுவார்களா என்ன? இவர்கள் யார்? இவர்களது கேடுகெட்ட கொள்கை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.
தற்போது இப்படி இவர்கள் அந்தர் பல்டி அடிக்க காரணம், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் வாரிச்சுருட்டலாம் மக்கள் நம்மை நம்பி ஏமாந்து பணத்தை தருவார்கள். நன்றாக ஏப்பம் விட்டுவிட்டு அந்த இயக்கத்தை விட்டுவிட்டு இன்னொரு பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கிவிட்டு மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட இயக்கத்திற்கும், எங்களது இந்த இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அறிவித்துவிட்டு, அடுத்த கட்ட சுருட்டலுக்கு ஆயத்தமாகலாம் என்பதுதான் இவர்களது தற்போதைய திட்டம் என்பது இவர்களது அறிவிப்பு வாயிலாக தெளிவாகின்றது.
புளுகுமூட்டை 3:
விபச்சாரிகளுக்கு பர்தா அணிவித்த எஸ்.டி.பி.ஐ:
கடந்த 12.01.2011 அன்று மேற்படி பெண்கள் பொது இடத்தில் நின்று பிறரைக் கவர்ந்தவர்களாக நின்று கொண்டு அநாகரீகமாக நடந்துள்ளதோடு, பர்தா அணிந்து முஸ்லிம் இளைஞர்களைக் கவரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர் என்று தங்களது அடுத்த புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர்.
இந்தச் செய்தியாவது துளியாவது உண்மையா என நாம் ஆய்வு செய்தால், இவர்கள் சொல்லக் கூடிய இந்த புளுகு மூட்டையை அவர்களது எஸ்.டி.பி.ஐ யின் 29வது வார்டு தலைவர் சீனி முஹம்மது அவர்களே மறுக்கின்றார்.
(இந்த சீனிமுஹம்மது என்பவர் தான் மதுரை மஹபூபாளையம் பகுதி 29வது வார்டு எஸ்.டி.பி.ஐ நிர்வாகத்தில் கடத்தலில் ஈடுபடாத நல்ல நிர்வாகி)
எஸ்.டி.பி.ஐ யின் 29வது வார்டு தலைவர் சீனிமுஹம்மது அவர்களிடத்தில் இந்தச் சம்பவம் குறித்து கேட்ட போது, சம்பவ தினத்தன்று கடத்தப்பட்ட அந்தப் பெண் மிகவும் கவர்ச்சியான உடையணிந்தவளாக, உடலுக்குள் உள்ளே அணிந்துள்ளவையும், அங்க அவயங்களும் வெளியே தெரியக் கூடிய அளவுக்கு ஆடையணிந்தவளாக நின்று கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைத் தான் அவர்கள் கடத்தினார்கள் என்று அவர் தெரிவித்தார். (இந்தப் பொய்யர் கூட்டம் அதை மறுக்குமேயானால், அதற்குரிய ஆதாரத்தை வெளியிடுவோம்)
பர்தா அணிந்து இஸ்லாத்தைக் கேவலப்படுத்தினாள் என்பது உண்மையா? ஆபாசமாக ஆடை அணிந்து இளைஞர்களைக் கெடுத்தாள் என்பது உண்மையா?
இந்த விஷயத்திலும் இவர்கள் எத்தகைய கேடுகெட்டவர்கள் என்பதை தங்களது கேவலபுத்தியை வெளிக்காட்டி மற்றுமொருமுறை நிரூபித்துள்ளார்கள். தாங்கள் நல்லவர்கள் என்பதை நிலைநாட்ட இவர்கள் விபச்சாரி என்று சொல்லக்கூடிய பெண்ணை பர்தா அணிந்திருந்தாள் என்று கூறி பர்தாவின் புனிதத்தை அசிங்கப்படுத்தியுள்ளனர். இந்தக் கேவலப்பட்ட கூட்டம் தங்களது திருகுதாளத்தை மறைக்க எத்தகைய நிலைக்கும் கீழி இறங்குவார்கள் என்பது தற்போது இவர்களது இந்தக் கேவலபுத்தியின் வாயிலாகத் தெளிவாகியுள்ளது.
புளுகுமூட்டை 4:
எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதாக கதைவிட்ட கதை:
இத்தகைய கேவலப்பட்ட செயலைச் செய்த இந்தக் கொள்கைக் கூட்டம் அதற்கு ஆதரவாக தங்களது நிர்வாகிகளையும், வழக்கறிஞரையும் அனுப்பி காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு காவல்துறையின் எச்சரிக்கைக்குப் பயந்து பின்னர் பின்வாங்கி விட்டு தற்போது எஸ்.டி.பி.ஐக்கும் இந்த கடத்தலுக்கும் சம்பந்தமில்லை, கடத்தலில் ஈடுபட்ட எவரும் எஸ்.டி.பி.ஐயின் செயல் வீரர் கூட கிடையாது அவர்கள் காஃபிர்கள் என்று முதலில் கதை விட்டனர். இவர்கள் தான் எஸ்.டி.பி.ஐயின் நிர்வாகிகளாயிற்றே! கடத்தல் சம்பவம் நடைபெற்ற நாள் வரையிலும் இவர்கள் தான் அந்தப் பகுதி நிர்வாகிகளாக இருந்துள்ளார்கள். இவர்களைக் கைது செய்த காவல்துறை இவர்களை விசாரிக்கும் போது கூட நாங்கள் எஸ்.டி.பி.ஐயின் 29வது வட்ட நிர்வாகிகள், என்று காவல்துறையினரிடத்தில் கூறியுள்ள சம்பவம் உட்பட அனைத்து விஷயங்களும் தெரிந்த நடுநிலையாளர்கள் இவர்களிடத்தில் கேள்வி கேட்க, அதற்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக கடத்தலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எங்களது அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் என்று வேறு வழியின்றி ஒப்புக் கொண்டு விட்டனர்.
இதோ அவர்கள் ஒப்புக் கொண்ட வாசகங்களை அவர்களது வார்த்தைகளிலிருந்தே எடுத்துக் காட்டுகின்றோம்.
இதில் பாஷா என்பவர் எந்தக் கட்சியையும் சேராதவர். பரக்கத், அல்ஹாஜ், பாபு என்ற பாதுஷா ஆகிய மூவரும் த.மு.மு.க.வில் இருந்து விலகி எஸ்.டி.பி.ஐ.யில் சில மாதங்களுக்கு முன் இணைந்தவர்கள். பரக்கத் கிளை துணைச் செயலாளராகவும் அல்ஹாஜ் பொருளாளராகவும் பொறுப்பு வகித்தனர்.
மேற்கண்டவாறு தங்களது விளக்கத்தில் அவர்கள் எஸ்.டி.பி.ஐ சேர்ந்தவர்கள் தான் என்று ஒப்புக் கொண்டு விட்டு, பிறகு அவர்களை நாங்கள் ஏற்கனவே நீக்கி விட்டோம் என்று தற்போது நாடகமாடி வருகின்றனர். இந்தக் கேவல செயலை செய்தவர்கள் முன்னால் தமுமுக வினர் தான் என்பதையும் சந்தடி சாக்கில் பதிய வைத்துள்ளனர். ம.ம.க இவர்களை ஆதரிப்பதில் ஒருவித நியாயமிருக்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
காஃபிராக ஆன பாபு என்பவர் பாபு என்ற பாதுஷா என மாறி விட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ யில் பொறுப்பு வகித்தவர்களை இவர்கள் இரண்டு மாதத்துக்கு முன்பே நீக்கி விட்டார்களாம். ஏற்கனவே கடத்தலில் ஈடுபட்ட பாபு என்ற எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரரை அவர் ஒரு காஃபிர். அவர் எப்போது இஸ்லாமிய போராளியானார் என்று சொல்லி முஸ்லிமை காஃபிராக்கியது போல, இப்போது கடத்தலில் ஈடுபட்ட அனைவரையும் நாங்கள் ஏற்கனவே நீக்கிவிட்டோம் என்று கூறி அனைவரது காதிலும் பூச்சுற்ற முயல்கின்றது இந்த மோசடிக்கும்பல்.
புளுகுமூட்டை 5:
”விபச்சாரிக்கு ஆதரவு; காவல்துறைக்கு பல்லக்கு” என்ற கட்டுக்கதை:
இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து கொண்டு விபச்சாரத்திற்கு அழைத்த அப்பெண்களின் செயல்களைக் கண்டு நாம் குறிப்பிட்ட அந்த நபர்கள் நாம் மேலே குறிப்பிட்ட இரு பெண்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும் போது புல்லட் ராணி எனும் பெண் தப்பி விட்டாள். குண சுந்தரியை மட்டும் பிடித்து ஆட்டோவில் ஏற்றி சி(3) காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் அங்கு விபச்சாரி மீது அவர்கள் கொடுத்து புகாரை வாங்க மறுத்த காவல்துறை (மாமூலோடு தானே விபசார விடுதிகள் நடைபெறுகிறது) புல்லட் ராணியிடமிருந்து ஒரு புகாரைப் பெற்று பெண்ணை கடத்தியதாக நான்கு பேரின் மீதும் புகாரை பதிவு செய்தது காவல்துறை.
இது தான் மதுரையில் நடந்த சம்பவம்
(விபச்சாரிகள் பர்தா அணிந்திருந்தார்கள் என்பது இவர்கள் சொல்லும் கடைந்தெடுத்த பொய் என்பதை நாம் ஏற்கனவே முன்னால் விளக்கியிருக்கின்றோம்)
இது தான் அவர்களது உலகமகா புளுகல் நம்பர் 5.
• கடத்தியவர் முஸ்லிமே இல்லை; காஃபிர் என்றனர்
• கடத்தியவர்கள் எங்களது இயக்கத்தைச் சேர்ந்தவர்களில்லை என்றனர்.
• கடத்தியவர்கள் எங்களது இயக்கத்தவர்கள் தான் அவர்களை நாங்கள் முன்பே நீக்கி விட்டோம் என்றனர்.
• கடத்தியவர்கள் முஸ்லிம்கள் தான். அவர்கள் அந்தப் பெண்ணைக் கடத்தியது எதற்கென்றால் “அந்த விபச்சாரிகளைப் பிடித்துக் கொண்டுபோய் போலீஸில் ஒப்படைப்பதற்காகத் தான் என்பது தான் இவர்கள் அடிக்கும் அடுத்த அந்தர் பல்டி.
மேலே அவர்கள் குறிப்பிட்டவைகளில் இரண்டு விஷயங்களை இந்த மோசடிக்கும்பல் பதிவு செய்கின்றது.
1.அதாவது விபச்சாரியைப் பிடித்து போலீஸில் ஒப்படைக்கத் தான் இந்த கடத்தல்.
2.ஆனால், விபச்சாரிகளை கையும் மெய்யுமாக பிடித்த அப்பாவி இளைஞர்களை, அதாவது அவர்களது பாஷையில் சொல்வதானால் அந்த அப்பாவி தியாகிகளை காவல்துறை அநியாயமாக பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளியுள்ளது.
அந்த தியாகிகளுக்கு ஆதரவாகத் தான் ம.ம.கட்சி கௌஸ் களத்தில் குதித்தார் என்பது தான் இவர்களது வாதம்.
அப்படியானால், காவல்துறை விபச்சாரிகளிடத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு விபச்சாரிகளை கையும் களவுமாக பிடித்த தியாகவான்களாகிய அப்பாவி இளைஞர்கள் மீது கடத்தல் வழக்குப்போட்டு உள்ளே தள்ளியிருக்கின்றது என்றால், பொய் வழக்குப்போட்ட காவல்துறைக்கு எதிராகவும், இந்த அப்பாவி(?) இளைஞர்களுக்கு ஆதரவாகவும், இந்த போர்த்தியாகிகள் எந்த போராட்டத்திலும் இறங்காதது ஏன்?
விபச்சாரிகள் கொடுத்த மாமூலில் இவர்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது என்பதால் தான் இவர்கள் போராட்டத்தில் இறங்கவில்லையா?
அத்தோடு மட்டுமில்லாமல், ம.ம.க மாநில அமைப்புச் செயலாளர் கௌஸ் அந்த இளைஞர்களுக்கு ஆதரவாகச் செல்லவில்லை. மாறாக இந்தக் கேடுகெட்ட செயலைச் செய்த இளைஞர்களை உள்ளே தள்ளி இவர்கள் மீது வழக்கை நன்றாக ஸ்ட்ராங் பண்ணுங்கள் என்று காவல்துறையிடத்தில் கோரிக்கை வைப்பதற்காகத் தான் அவர் சென்றார் என்று ம.ம.கட்சி தரப்பு சொல்லி வருகின்றது. அப்படியானால், விபச்சாரிகளுக்கு ஆதரவாக அப்பாவி இளைஞர்கள் மீது கேஸ்போட்ட காவல்துறைக்கு ஆதரவாக ம.ம.கட்சி நின்றுள்ளது என்றால், அந்த விபச்சாரிகளிடத்தில் காவல்துறை வாங்கிய மாமூலில் ம.ம.கட்சிக்கு எவ்வளவு பங்கு வழங்கப்பட்டது என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
ஆகமொத்ததில் தாங்கள் செய்த தவறுகளை எப்படியாவது முட்டுக்கொடுத்து பொய்யையும், புரட்டையும் கட்டவிழ்த்து விட்டு நியாயப்படுத்தலாம் என கனவுகண்ட அந்த மோசடிக் கும்பலை அல்லாஹ் அவர்களது விளக்கத்தை வைத்தே அடையாளம் காட்டியுள்ளான் என்று சொன்னால் அது மிகையல்ல. (அல்ஹம்துலில்லாஹ்…)
அவதூறு போஸ்டர் ஒட்டி கேவலப்பட்ட பொய்யர்கள்:
இந்த நிலையில் கேடுகெட்டவர்கள் செய்த கேவலச்செயலை சமுதாய மக்களுக்கு அம்பலப்படுத்திய உணர்வு வார இதழைக்கண்டித்து அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன., விபச்சாரிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் செயல்படுவதாகவும் அவதூறு போஸ்டரை ம.ம.கட்சியின் துணையோடு எஸ்.டி.பி.ஐ ஒட்டியுள்ளது.
விபச்சாரிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தும், உணர்வு வார இதழும் செயல்பட்டது என்றால், அந்த விபச்சாரிகளுக்கு ஆதரவாக ம.ம.கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் களம்இறங்கியது ஏன்? அந்த கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்களை உள்ளே தள்ளுங்கள் என்று காவல்துறையிடம் சொன்னது ஏன்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் விபச்சாரிகளையும் விபச்சாரிகளை கடத்தியவர்களையும் கண்டிக்கவல்லவா செய்தது. நீங்கள் தானே அந்த விபச்சாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளீர்கள் அவர்களோடு உங்களுக்கு உள்ள “டீலிங்” என்ன என்று கேட்டு பொதுமக்கள் இவர்களை கேட்டு காரித்துப்ப தற்போது கடத்தலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐயும் முட்டுக்கொடுத்த ம.ம.கட்சியினரும் செய்வதறியாது விழிபிதுங்கியுள்ளனர்
உணர்வு வாசகர் மன்றம்
இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ்!

டிப்ளோமா , +2 படித்தவர்களுக்கு BPO வேலை

ஓரளவு ஆங்கில பேச்சாற்றல், எழுத்து திறன் உள்ள டிப்ளோமா , +2 படித்தவர்களுக்கு சென்னையில் உள்ள BPO-ல் வேலைக்கான நேர்முக தேர்வு (இன்டெர்வியு) நடைபெற்று கொண்டுஇருக்கின்றது. வேலையில் சேர விரும்புவோர் நேரடியாக அலுவலகத்திற்க்கு சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளவும்.
மாத சம்பளம் : ரூ.7,000 மற்றும் இன்சென்டீவ்ஸ் (ஆங்கில திறனை பொருத்து அதிக சம்பளம் வழங்கப்படும்)
நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய முகவரி : Soft logic systems : No : 10,PT Rajan Salai, KK Nagar, Chennai – 600078 (Land mark : Above Karnataka bank)
நேரம் : காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை
கடைசி தேதி : பிப்ரவரி 20
தொடர்பு கொள்ள வேண்டிய நபர் : சகோ.இம்ரான்

சட்ட படிப்பு படிக்க CLAT நுழைவு தேர்வு

இந்தியாவில் உள்ள 11 சட்ட பல்கலை கழகங்களில் சட்ட படிப்பு படிக்க CLAT (Common Law Admission Test) என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகின்றது. இதற்க்கான விண்ணப்ப படிவம் தற்போது விணியோகிக்கப்பட்டுகொண்டு இருக்கின்றது. பொதுவாகவே இந்த நுழைவு தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவு, சுமாராக படித்தாலே இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம். தற்போது பெரிய அளவில் மாணவர்கள் சட்ட படிப்பில் ஆர்வம் காட்டாததால் இந்த தேர்வில் அதிகம் போட்டிகள் இருக்காது. சட்ட படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதி எளிதில் சட்ட படிப்பு படிக்கலாம்.
கல்வி தகுதி : 12 – ஆம் வகுப்பு அல்லது டிப்ளோமா படித்து இருக்க வேண்டும். +2 வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம். +2 ஆம் வகுப்பில் குறைந்தது 45 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 வயது
விண்ணப்பம் வாங்க கடைசி தேதி : 24/02/11
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 2/04/11
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : அனைத்து தலைமை தபால் நிலையங்கள்
விண்ணப்பத்தின் விலை : ரூ.150
தேர்வு கட்டணம் : ரூ.2,500
தேர்வு நடைபெறும் நாள் : 15/05/11
தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள் : 28/05/11
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : The Convenor, Common Law Admission Test, CLAT-2011, The West Bengal National University of Juridical Sciences, Kolkata, Dr. Ambedkar Bhawan, 12 L.B. Block, Sector – III, Salt Lake City, Kolkata 700 098.
தேர்வை பற்றி : இந்த தேர்வு 5 பாடங்களை கொண்டது, ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, Aptitude மற்றும் Logical Reasoning. இந்த 5 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும்.
இந்த தேர்வு சம்மந்தமான முழு தகவலும் www.clat.ac.in இந்த இணைய தளத்தில் உள்ளது

IISc – 4 ஆண்டு B.S. படிப்பில் சேர

இந்தியாவில் மிக உயர்ந்த அறிவியல் கல்வி நிறுவனம் “இந்திய அறிவியல் கழகம்” எனப்படும் “IISC”. இது மத்திய அரசின் நிறுவனம், பெங்களூரில் மட்டுமே உள்ளது.
இந்த கல்வி நிறுவனத்தில் 4 ஆண்டு இளநிலை அறிவியல் (B.S) படிப்பிற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பணிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்கு விண்ணப்பிக்க IIT-JEE, AIEEE, AIPMT தேர்வில் ஏதாவது ஒன்றை எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பயிற்றுவிக்கப்படும் படிப்புகள்
B.S (MATHEMATICS)
B.S. (PHYSICS)
B.S (CHEMISTRY)
B.S (BIOLOGY)
B.S. (MATERIALS)
B.S. (ENVIRONMENTAL SCIENCE)
இந்த www.iisc.ernet.in/ug இணையதளத்திற்க்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.400
விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 25
இது மத்திய அரசின் நிறுவனம் எனவே முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு உள்ளது. இங்கு படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்காக சிறப்பு கல்வி உதவி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.
மேலும் விபரங்கள் இந்த www.iisc.ernet.in/ug இணையதளத்தில் உள்ளது.

TNPSC குரூப் – 1 தேர்வு எழுத இலவச பயிற்சி

IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆணையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது இன்ஷா அல்லாஹ். இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
முஸ்லீம் பட்டதாரிகள் பயன்பெரும் வகையில் தமிழகத்தில் 13 இடங்களில் குரூப் I மற்றும் குரூப் II தேர்விற்க்காக இலவச பயிற்சி நடத்த படவிருப்பதாக ரேடியன்ட் அகாடமி தலைவர் ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள புது கல்லூரியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் சென்னை எஸ்ஐஇடி பெண்கள் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி, மதுரை வக்ப் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி உட்பட தமிழக்த்தில் 13 இடங்களில் இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த இலவச பயிற்சி பற்றி மேலும் தெரிந்துகொள்ள ரேடியன்ட் அகாடமி ரஹ்மதுல்லாஹ் (9629309314) அவர்களை தொடர்பு கொள்ளாம்.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு :- அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பாரா மற்றும் மஹாந்த் அவிதயா நாத் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.
அதில் இவர்கள் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ விடுத்த வேண்டுகோளை கடந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விடயத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய புலனாய்வு கழகமான சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
-வெப்துனியா